திண்டுக்கல், மார்ச் 17- திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை யிலான ‘இந்தியா’ கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதான ந்தத்திற்கு அவரது சொந்த கிராமமான காமாட்சிபுரம் - கட்டசின்னம்பட்டியில் பொது மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திமுக தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் வட்டார தலைவர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டியார் சத்திரம் ஒன்றியக் குழு செயலாளர் கே.எஸ்.சக்திவேல், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.தயாளன், பி.என்.ஆறுமுகம், ஏ.சையது ஆதாம் சேட், ஏ.முருகன், ஆர்.எஸ்.கவிதா உட்பட கட்சித் தோழர்கள் கலந்து கொண்டனர்.
திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியை ஞாயிறன்று சந்தித்தார். அமைச்சர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். உடன் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், என்.குணசேகரன், கே.பாலபாரதி, என்.பாண்டி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமாரை திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் சந்தித்தார். அவருக்கு செந்தில்குமார் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், மதுக்கூர் இராமலிங்கம், கே.பாலபாரதி, என்.பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.