districts

img

ஆக.27ல் இலவச வீட்டுமனை பட்டா கோரி மாநிலம் தழுவிய பெருந்திரள் முறையீடு

திண்டுக்கல், ஆக.16- இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாநிலம் தழுவிய அளவில் மாவட்டத்  தலைநகரங்களில் பெருந்திரள் முறையீடு நடத்தப் போவதாக அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.  செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்க ளில் கொடைக்கானலில் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்  குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்  தில் அகில இந்திய பொதுச் செயலா ளர் பி.வெங்கட், அகில இந்திய இணைச்  செயலாளரும், மாநிலங்களவை உறுப்பி னருமான  டாக்டர் வி.சிவதாசன் எம்.பி.,  அகில இந்திய துணைத்தலைவரும் முன் னாள் எம்எல்ஏவுமான ஏ.லாசர், மாநில துணைத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம், மாநில பொருளாளர் பழனிச்சாமி, மாவட்டத்தலைவர் பி. வசந்தாமணி, மாவட்டச் செயலாளர் கே. அருள்செல்வன், மாவட்டப் பொருளாளர் கே.ரவிச்சந்திரன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட் டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிப்பதற்கு மாநிலக்குழு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இத்திட்டத்தில் நாடு முழுவதும் பல லட்சம் பேர் பயன்பெறுவதால் கிராம  மக்களின் வாழ்வாதாரத்தை கருதி ஒன்றிய  பாஜக அரசு ரூ.2.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டும். தமிழ கத்தில் ஆட்சி நடத்தும் திமுக அரசு 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.

தினசரி கூலி ரூ.600 வழங்க வேண்டும். தமிழக அரசின் கலை ஞர் கனவு இல்லத்திட்டத்திற்கு ரூ.10 லட்சம்  ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒன்றிய பாஜக அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசின் ரூ.5லட்சமும், மாநில அரசு  ரூ.5 லட்சமும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  பல்வேறு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க மாநில அரசு முன்வரவேண்டும். நகர்ப்புற வேலை உறு தித்திட்டத்திற்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து நகர்ப் பகுதிகளிலும் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 27ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் முறையீடு நடத்துவது என்று மாநிலக்குழு தீர்மானித்துள்ளது.  இக்கூட்டத்தில் திண்டுக்கல்  மக்க ளவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் மற்றும் சிபிஎம் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பி.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.