districts

img

குருமன்ஸ் மக்களுக்கு பழங்குடியின சான்றிதழ் கிடைக்க மலைவாழ் மக்கள் சங்கம் தொடர்ந்து போராடும்

தருமபுரி, ஜூலை 14- குருமன்ஸ் மக்களுக்கு பழங்குடி யின சான்றிதழ் கிடைக்க, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தொ டர்ந்து போராடும் என, ஆதிவாசி களுக்கான தேசிய மேடையின் மத்தி யக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் உறுதியளித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட குருமன்ஸ் பழங்குடி இன மக்களுக்கான விழிப்பு ணர்வு பயிற்சி முகாம், கடத்தூர் லட்சுமி கோவர்த்தனபாய் மஹா லில் ஞாயிறன்று நடைபெற்றது. குரு மன்ஸ் பழங்குடி மக்கள் சங்க  மாவட்டத் தலைவர் சி.சொக்க லிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.குப்பு சாமி, பொருளாளர் எஸ்.நாகராஜூ, துணைத்தலைவர் எம்.நாகராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்நிகழ்வில், ஆதிவாசி மக்க ளுக்கான தேசிய மேடையின் மத்தி யக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பேசுகையில், இந்தியாவில் பழங்குடி யினர் சமூகத்தில் 705 பிரிவுகள் உள்ளன. மொத்தம் 10 கோடி பேர் உள்ளனர். சமவெளியில் ஒன்றரை கோடி மக்கள் வாழ்கின்றனர். பழங்குடியினர் சமூகத்திற்கு எஸ்டி சான்றிதழ் வழங்க, தாய் – தந்தை, நெருங்கிய உறவினர், கொடி வழி உறவுகள் ஆகியோரின் சான்றி தழ்களை கண்டறிந்து ஆய்வு செய்து, கோட்டாட்சியர் சான்றிதழ் வழங்கலாம். 

1989 ஆம் ஆண்டு எஸ்டி சான்றி தழை வட்டாட்சியரே வழங்கலாம் என்று இருந்தது. அதனை மாற்றி 1994 ஆம் ஆண்டு கோட்டாட்சியர் வழங்க வேண்டும் என அரசு உத்த ரவு பிறப்பித்துள்ளது. கோட்டாட்சி யர்கள் பழங்குடியினர் வாழ்நிலை யை அறிந்து சான்றிதழ் வழங்க வேண்டும்.  அவர்கள் (பழங்குடி) அணிந்திருக்கும் உடையைப் பார்த்து, உருவத்தைப் பார்த்து, பழங்குடியினர் இல்லை என சொல்லக்கூடாது. இதற்காக தமிழ்நாடு அரசின் அரசாணை 59 இல்  வழிகாட்டப்பட்டுள்ளது.

1950 ஆம் ஆண்டு பழங்குடி யினர் பட்டியல் இந்திய குடியரசுத் தலைவரால் வெளியிடப்பட்டது. பழங்குடியினர் உருவம், ஆடையை கொண்டு பழங்குடியினர் இல்லை என முடிவு செய்யக்கூடாது. அதே போன்று மெய்தன்மையை நிரூபிக்க 50 வருட ஆவணத்தை கேட்கக் கூடாது. எத்தனை அரசாணைகள் வெளியிட்டாலும் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் படிப்பதும் இல்லை; மதிப்பதும் இல்லை. ஒருவர் பழங்குடியினர் என முழு திருப்தி அடைந்தாலே கோட்டாட்சி யர் எஸ்டி சான்றிதழ் வழங்கலாம். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த பழங்குடியின மாணவியின் இனச்சான்றிதழ் செல்லாது என அறிவித்துவிட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற தில், வரலாற்று சிறப்பு மிக்க  தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை அதிகாரிகள் பின்பற்றி இனச்சான்றி தழ் வழங்க வேண்டும். கல்லூரி யில் மாணவர்கள் சேர்ந்தால் 6 மாதத்திற்குள் சான்றிதழ் சரி பார்ப்பு செய்ய வேண்டும். பழங்குடி மக்கள், குருமன்ஸ் உள்ளிட்ட வர்களுக்கு சான்றிதழ் வழங்க 2023 ஆம் ஆண்டு அரசாணையில் வழிகாட்டுதல்கள் உள்ளன. இதனை கோட்டாட்சியர்கள் பின் பற்றி சான்றிதழ் வழங்க வேண்டும். பழங்குடி மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கவும், குருமன்ஸ் மக்களுக்கு பழங்குடியின சான்றி தழ் கிடைக்கவும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் போராடும்” என்றார்.

இந்நிகழ்வில், பணி ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கண்ணன், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாநில பொ துச்செயலாளர் இரா.சரவணன், தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பின் மாநில பொதுச்செயலாளர் அண்ணா குபேரன், குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்க மாநிலத் தலைவர் எல்.சிவலிங்கம், பொ துச்செயலாளர் பி.வீரபத்திரன், மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச்செயலாளர் ஏ.கண்ணகி, மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், மாவட்டத் தலைவர் ஏ.அம்புரோஸ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சு ணன், மாவட்டப் பொருளாளர் சி.வஞ்சி, இந்திய மாணவர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் தி.வ.தனுசன், வழக்கறிஞர் ஜே.வி.லட்சுமிகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குருமன்ஸ் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு பகுதியின ருக்கு குருமன்ஸ் பழங்குடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்க ளாக பழங்குடியின சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியரிடம் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் விசாரணையின்றி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் கல்லூரி படிப்பிற்கு செல்ல முடியவில்லை. ஒரே குடும்பத்தில் எஸ்டி சான்றிதழ் பெற்றிருந்தும், குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க மறுக்கின்றனர். எனவே, பழங்குடியின சான்றிதழ் கேட்டு விண்ணப் பித்துள்ள குருமன்ஸ் மக்களுக்கு சான்றிதழ் கிடைக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.