districts

img

உடல் உபாதைகளால் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

தருமபுரி, ஜூலை 4- கடம்பரஅள்ளி அருகே அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு உடல் உபாதைகளால் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், கம்பைநல் லூர், கடம்பரஅள்ளி பகுதி அருகே ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத் தின் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குடிநீர் தொட்டி மூலம் வகு ரப்பம்பட்டி, கடம்பரஹள்ளி, பெரி சாகவுண்டப்பட்டி, பட்டகப்பட்டி உள் ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்க ளுக்கு தினந்தோறும் குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில், இக்குடிநீர் தொட் டியின் அருகே வசித்து வரும் திருப் பதி என்பவர், தனக்கு தனியாக குடி நீர் குழாய் அமைத்ததாக கூறப்படு கிறது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, குழாயை துண்டித்துள் ளனர். இதனால், ‘குடிநீர் தர மறுத்த உங்களை எல்லாம், ஏதாவது ஒரு வழி செய்யாமல் விடமாட்டேன்’ என திருப்பதி கூறியதாக பொது மக்கள் தெரிவித்தினர். இதைத்தொ டர்ந்து அடிக்கடி திருப்பதி மேல் நிலை நீர்தேக்கத் தொட்டியின் மேல், ஏறுவதும் இறங்குவதுமாக இருந்துள்ளார்.

இதனை கண்ட கிராம மக்கள் திருப்பதி, குடிநீர் தொட்டியில் ஏதேனும் கலந்து இருக்கலாம் என அச்சமடைந்து காவல் துறையினர் மற்றும் வரு வாய்த் துறையினர், ஊரக வளர்ச் சித் துறையினருக்கு தகவல் தெரி வித்துள்ளனர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நீர் தேக்கத் தொட்டியினை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். இதனிடையே, கம்பைநல்லூர்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் படிக்கின்ற ஒரு சில மாணவர்க ளுக்கு திடீரென தலைவலி, கண் எரிச்சல், வயிறு வலி, கை கால் வலி மற்றும் மயக்கம் போன்ற உபாதை கள் இருப்பதாக தெரிவித்துள்ள னர்.

மேலும், இந்த உபாதை ஏற் பட்ட மாணவர்கள் ஒகேனக்கல் கூட் டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடி நீர் விநியோகம் செய்யப்படுகின்ற கிராமத்தைச் சார்ந்தவர்கள் என்ப தால், ஒருவேளை மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் உள்ள தண் ணீரை குடித்ததால் தான் இந்த உபாதை ஏற்பட்டு இருக்கலாமோ என அச்சமடைந்து, கம்பைதல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக கடம்பர அள்ளி, வகுப்பம்பட்டி, பெருசா கவுண்டம்பட்டி, பட்டகப்பட்டி உள் ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாண வர்களை அழைத்து, தலைமையா சிரியர் பழனி, அரசு பள்ளி வளா கத்திலேயே சிறப்பு மருத்துவ முகா மிற்கு ஏற்பாடு செய்தார்.

பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அச்ச மடையக் காரணமான மேல்நிலை  நீர்தேக்கத் தொட்டியில் மருத்துவர்  குழு மற்றும் குடிநீர் வடிகால் வாரி யத்தில் உள்ள அலுவலகக் குழு  ஆய்வு செய்து குடிநீரை பரிசோ தனைக்காக எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.