தருமபுரி, ஆக.13 - பழங்குடியின மக்கள் இன்று அனு பவிக்கிற கொஞ்ச நஞ்ச உரிமைகளும் கூட, வலுவான போராட்டங்களினாலே கிடைத்தவை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பெ. சண்முகம் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் சார்பில், பழங்குடி செயற்பாட்டா ளர்களுக்கான மாநில பயிற்சி முகாம் தரும புரியில் நடைபெற்று வருகிறது. இதில், “வன உரிமைச் சட்டம் - 2006” என்ற தலைப் பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் பேசுகை யில், “வனத்துறையினர் காலம் காலமாக பழங்குடிகள் மீது பொய் வழக்கு தொடுத்து வருகின்றனர். மற்ற வழக்குகளைப் போன்று இல்லாமல், வனத்துறை வழக்கு களில் சாட்சிகள் தேவையில்லை. இதற்கு எதிராக மலைவாழ் மக்கள் சங்கம் போராடி, தற்போது வனத்துறையினர் பொய் வழக்கு தொடுக்கத் தயங்கும் நிலைமை வந்து உள்ளது.
வன உரிமைச் சட்டம் வந்த கதை
தனிநபர் பட்டாவை தவிர்த்து, மீத நிலம் அரசுக்கு சொந்தமானது என்று அறிவிக்கப் பட்டது. இதுதொடர்பாக 1995 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், 2001 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், தனிநபர் பட்டாவை தவிர்த்து, மீதமுள்ள அனைவரும் வனத்தை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், 2002 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு பட்டா இல்லாத பூர்வகுடிகளை வனத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று உத்தர விட்டது. இந்த உத்தரவை அன்றைக்கு இடது முன்னணி ஆட்சி நடைபெற்ற மேற்கு வங்கம், திரிபுராவில் அமல்படுத்த வில்லை; மற்ற மாநிலங்களில் அமல்படுத்த தயாராகிவிட்டனர். தமிழ்நாட்டில் அன்றைய அதிமுக அரசும் பழங்குடிகளை வெளி யேற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் வலுவான போராட்டத்தின் விளை வாக இந்த உத்தரவு கைவிடப்பட்டது.
அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், இடது சாரிகளின் தயவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தது. அப்போது, குறைந்த பட்ச செயல்திட்டம் வகுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் முயற்சியில், 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டு, 2008 ஆம் ஆண்டு முதல் அம லுக்கு வந்தது. இதுவரை வனம் அரசுக்குச் சொந்தமானது என்ற நிலைமாறி, வன உரிமைச் சட்டத்திற்கு பிறகு வனம் பழங்குடிகளுக்கு சொந்தமானது என்ற நிலை உருவானது.
16 ஆண்டுகளில்...
வன உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த 16 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நிலப்பட்டா கேட்டு, 50 லட்சத்து 54 ஆயி ரத்து 914 மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதனைப் பரிசீலித்து 24 லட்சத்து 87 ஆயி ரத்து 347 பேருக்கு, ஒரு கோடியே, 90 லட்சத்து 883 ஏக்கர் பட்டா வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 10 லட்சம் பழங்குடி மக்கள் உள்ளனர். இதில் 7 லட்சம் பேர் மலையிலும், 3 லட்சம் பேர் சமவெளியி லும் வசித்து வருகின்றனர். நிலப்பட்டா கேட்டு 37,461 மனுக்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அதில் 11,067 பேருக்கு 9,626 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. சராசரி தலா ஒரு ஏக்கர் நிலம் கூட கிடைக்க வில்லை. புதிதாக விண்ணப்பித்தவர்கள் மற்றும் நிலுவையில் உள்ள விண்ணப்பங் கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைக்கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும்” என்றார்.