தருமபுரி, ஏப்.2- பஞ்சப்பள்ளி அஞ்சல் அலுவல கத்தை துணை அஞ்சல் அலுவலகமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து அரசியல் கட்சியினர் மற் றும் கிராம மக்கள் சார்பில் பஞ்சப் பள்ளியில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் அருகே உள்ளது பஞ்சப்பள்ளி கிராமம். இங்கு சுமார் 60 ஆண்டு களுக்கு முன் தபால் நிலையம் துவங்கப்பட்டது. பஞ்சப்பள்ளி பஞ்சா யத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த அஞ்சல் நிலையத்தில் ஆயிரத்திற் கும் மேறபட்டோர் கணக்கு வைத்துள் ளனர். சிறுசேமிப்பு திட்டத்திலும் மக் கள் இணைந்துள்ளனர். மேலும், இந்த அலுவலகத்தின் மூலம் முதியோர் உதவித்தொகை மற்றும் அரசின் உதவித்தொகைகளை மக்கள் பெற்று வருகின்றனர். தபால் மற்றும் விரைவு தபால் அனுப்ப உதவிகரமாக உள் ளது. இந்நிலையில், அஞ்சல் நிலைய மாக இயங்கி வந்த இந்த அலுவ லகத்தை உதவித் அஞ்சல் நிலையம் மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அஞ் சல் நிலைய அலுவலகமாக தொடர்ந்து செயல்பட மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி அனைத்து அரசியல் கட்சியினர் பஞ்சப்பள்ளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக வார்டு உறுப்பினர் தேவேந்தி ரன் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் என்.சந்திரசேகரன், திமுக சார்பில் தினேஷ் சத்தியமூர்த்தி, பாக் கியராஜ், அதிமுக சார்பில் முனிராஜ், நஞ்சுண்டன் மற்றும் அப்பகுதி பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்ட னர்.