தருமபுரி, ஜூலை 16- கர்நாடகா மாநில அணைகளிலி ருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள தால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி யாற்றில் பரிசல் இயக்க ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், மைசூர், குடகு மாவட்டங்களில் கடந்த சில நாட்க ளாக தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளது. இதன்காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி அணை யின் மொத்த கொள்ளளவான 84 அடி யில், தற்போது 83 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், காவிரியாற்றில் சனி யன்று நிலவரப்படி விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப் பட்டது. இதேபோல கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து விநாடிக்கு 556 கனஅடி நீர் காவிரியில் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனி டையே, கபினி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வருவதால், வெளியேற்றப்படும் உப ரிநீரின் அளவு திங்களன்று காலை விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இவ்விரு அணை களிலிருந்தும் காவிரியாற்றில் வெளி யேற்றப்படும் உபரிநீரின் அளவு விநா டிக்கு 25,556 கனஅடியாக அதிகரித் துள்ளது.
இந்நிலையில், கடந்த இரு தினங் களுக்கு முன் காவிரியாற்றில் திறக் கப்பட்ட உபரிநீர் திங்களன்று மாலை 5 மணியளவில் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந் தடைந்தது. இதனிடையே, திங்க ளன்று காலை நிலவரப்படி விநா டிக்கு 4,500 கனஅடியாக நீர்வரத்து, மாலை 5 மணி நிலவரப்படி 10 ஆயி ரம் கனஅடியாகவும், 7 மணி நிலவரப் படி 15 ஆயிரம் கனஅடியாகவும், செவ் வாயன்று காலை நிலவரப்படி 20 ஆயி ரம் கனஅடியாகவும் அதிகரித்துள்ள தாக மத்திய நீர்வளத்துறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிக ரித்துள்ளதால், ஐந்தருவி, பெரிய பாணி, பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
பரிசல் இயக்கத் தடை
இதனிடையே ஒகேனக்கல் காவி ரியாற்றில் செவ்வாயன்று காலை நில வரப்படி 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என் பதால், சுற்றுலாப் பயணிகளின் பாது காப்புக் கருகி, ஒகேனக்கல் காவிரி யாற்றில் பரிசல் இயக்குவதற்கு செவ் வாயன்று முதல் மறு உத்தரவு வரை தடை விதிக்கப்படுகிறது. மேலும், காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்வதால் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் காவிரி யாற்றின் கரையோரம் உள்ள பொது மக்கள் இரவு நேரங்களில் கரையைக் கடப்பதையும், தங்களுடைய கால் நடைகளையும் ஆற்றங்கரைக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள் ளார்.