districts

img

ஒகேனக்கல் 2 -வது குடிநீர் திட்டத்தை எதிர்க்கும் கர்நாடக பிஜேபி அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்திருந்தார்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்தத் திட்டத்தை துவக்குவதற்கான சட்டப்பூர்வ மற்றும் தார்மீக உரிமை தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்றவிட மாட்டோம் என கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ்பொம்மை கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கட்சி கூறியிருந்தது.

இதனைத்தொடர்ந்து, ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தருமபுரியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமைவகித்தார். மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சிசுபாலன்,எஸ்.கிரைஸாமேரி,வே.விசுவநாதன்,தருமபுரி சிபிஎம் நகரசெயலாளர் ஆர்.ஜோசுபாசு, ஒன்றிய செயலாளர்கள்  என்.கந்தசாமி ,நல்லம்பள்ளி எஸ்.எஸ்.சின்னராஜ், காரிமங்கலம் பி.ஜெயராமன், இண்டூர்  பிரகாசம் ,பென்னாகரம் ரவி,பாப்பாரப்பட்டி ஆர்.சின்னசாமி,மாவட்டகுழு உறுப்பினர்கள் டி.எஸ்.ராமச்சந்திரன் , கே.குப்புசாமி வழக்கறிஞர் டி.மாதையன்  ஏ.ஜெயா ,பி.ஜிவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.