தருமபுரி, ஜன.29- ஒகேனக்கல் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி யானது துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியானது ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடை பெறும். அதன்படி 2022-2023 ஆம் ஆண்டிற்கான பறவை கள் கணக்கெடுப்பானது நீர் பறவைகள் மற்றும் நில பறவை கள் என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு சுற்றுச்சூழல் கழக மாணவர்கள், ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் பென் னாகரம், ஒகேனக்கல் வனச்சரக அலுவலர்களுடன் ஒகே னக்கல் பகுதியில் பல்வேறு வகையான பறவை இனங்கள் கண்டறிந்து கணக்கெடுப்பு நடத்தினர். இதில் 2020 ஆம் ஆண் டிற்கு பிறகு தற்பொழுது பறவையினங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இந்த கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது. இப்பகுதிகளில் தேசிய பறவையான மயில்களின் எண் ணிக்கை கூடியிருப்பது இயற்கை ஆர்வலர்களுக்கு இரட் டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்ச்சியை ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் ராஜ்குமார், பென்னாகரம் வனச்சரக அலுவலர் முருகன் மற்றும் நெருப் பூர் வனச்சரக அலுவலர்கள் செய்திருந்தனர்.