districts

img

ஊரகப் பகுதிகளிலும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்!

தருமபுரி, ஜூலை 11- ஊரகப் பகுதிகளிலும் ‘மக்களு டன் முதல்வர்’ திட்டத்தை, முதல் வர் மு.க. ஸ்டாலின் வியாழனன்று தருமபுரியில் துவக்கி வைத்தார்.  அப்போது, தருமபுரி மாவட்டத் தில் ரூ. 500 கோடி மதிப்பில் நிறை வேற்றப்பட்ட திட்டப் பணிகளை  திறந்து வைத்தும், பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் உரையாற்றினார். அவர் பேசியது வருமாறு:

“நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், முதல்வ ரின் முகவரி துறையின்கீழ் தற் போது வரைக்கும் பெறப்பட்ட, 68 லட்சத்து 30 ஆயிரத்து 281 மனுக்  களில் 66 லட்சத்து 25 ஆயிரத்து 304 மனுக்களுக்கு உரிய முறையில் தீர்வு கண்டிருக்கிறோம்.  

அதிலும், இந்த தருமபுரி மாவட்  டத்தில் மட்டும், 72 ஆயிரத்து 438  மனுக்களுக்கு சாதகமான முறை யில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. 13 அரசுத் துறைகள், நகரங்களுக் கும், கிராமங்களுக்கும் நேரடியாக சென்று மக்களாகிய உங்களிடம் உங்கள் ஊரிலேயே மனுக்களைப் பெற்று பதிவு செய்து அதற்கு 30  நாட்களுக்குள் தீர்வு காணும் வகை யில் நான் உத்தரவிட்டேன்.

அதன்  படி உருவானதுதான் இந்த ‘மக்க ளுடன் முதல்வர்’ திட்டம். முதற்கட்டமாக, மாநகராட்சி கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டி யிருக்கும் கிராம ஊராட்சிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன! இந்த முகாம்கள் வாயிலாகப் பெறப்பட்ட சுமார் 8 லட்சத்து 74  ஆயிரம் மனுக்களுக்கு இதுவரைக் கும் தீர்வு கண்டிருக்கிறோம். இந்த  தருமபுரி மாவட்டத்தில் நகரப் பகுதி களில், 3 ஆயிரத்து 107 மனுக்கள்  பெறப்பட்டு, 30 நாட்களில் 1,868  மனுக்களுக்கு சாதகமான முறை யில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி இந்தத் திட்டம் மக்களுக்குப்  பயனளிக்க தொடங்கிய காரணத் தால்தான், இப்போது ஊரக ஊராட்சி  களுக்கும் விரிவு செய்திருக்கி றோம். அதைத் தொடங்கி வைக்க  தான் நான் இங்கே வந்திருக்கி றேன்.  கடந்த முறை தேர்தல் பரப்பு ரைக்காக நான் வந்தேன். இப் போது, நீங்கள் கொடுத்த வெற்  றிக்கு நன்றியாக உங்கள் மாவட் டத்திற்கான அறிவிப்புகளை வெளி யிடுகிறேன். 51 கோடி ரூபாய்  செலவில் அரூர் அரசு மருத்துவ மனையின் உட்கட்டமைப்பு வசதி கள் மேம்படுத்தப்படும்.

கடந்த சட்ட மன்றத் தேர்தல் பரப்புரையின் போது கொடுத்த வாக்குறுதியான தருமபுரி – வெண்ணம்பட்டி சாலை யில், புதிய ரயில் மேம்பாலம் 38  கோடி ரூபாய் செலவில் அமைக்கப்  படும். மோபிரிபட்டி – தொட்டம்பட்டி யை இணைத்து, “அரூர் பேரூ ராட்சி”, “அரூர் நகராட்சியாக” தரம்  உயர்த்தப்படும்.  இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார். முன்னதாக, இவ்விழாவில் ரூ. 444.77 கோடி செலவில் 621 முடிவுற்ற திட்டப் பணிகளை  திறந்து வைத்து, 2637 பயனாளி களுக்கு ரூ. 56.04 கோடி மதிப்பி லான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வில், நகராட்சி நிர்வா கத் துறை அமைச்சர் கே.என். நேரு,  வேளாண்மை – உழவர் நலத்துறை  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், நாடாளுமன்ற உறுப்பி னர் ஆ. மணி, சட்டமன்ற உறுப்பி னர்கள் ஜி.கே.மணி, எஸ்.பி. வெங்க டேஸ்வரன், ‘முதல்வரின் முகவரி’  துறை சிறப்பு அலுவலர் த. மோகன், மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ. சுப்பிரமணி, முன் னாள் அமைச்சர் முனைவர் பி. பழனியப்பன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற் றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.