தருமபுரி, ஜூலை 2- அரூர் சிட்லிங் ஊராட்சியில் பழங்குடி மக்களின் நிலங்களை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்று மலைவாழ் மக்கள் சங்கத்தலைவர் பி.டில்லி பாபு கூறினார்.
பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழங்குடியினருக்கு இனச் சான்று, பட்டா, வீட்டுமனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் தருமபுரியில் ஜூலை 2 செவ்வாய்க்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரூர் கோட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ. அன்புரோஸ் தலைமை வகித்தார்.
மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு, மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
நேரில் விண்ணப்பத்தை ஏற்று சாதிச்சான்றிதழ் வழங்கிடுக!
ஆர்ப்பாட்டத்தில் பி.டில்லிபாபு பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் பழங்குடி மக்கள் அதிக அளவில் வசிக்கின்ற னர். பழங்குடி இனச்சான்றிதழ் கேட்டு வருவாய் கோட்டாட்சியரிடம் மனுகொடுக்கப்பட்டது. அந்த மனுவை பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு மலையாளி, குருமன்ஸ் உள்ளிட்ட பழங்குடி மக்களுக்கு ஆயிரக்கணக்கான எஸ்டி சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளன. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் முகாம் நடத்தி காலையில் மனுபெற்று மாலையே சான்றிதழ்கள் வருவாய் கோட்டாட்சியரால் வழங்கப் பட்டுள்ளன.
தற்போது இனச்சான்றிதழ் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை வந்தபிறகு ஆயிரக்கணக்கான மனுக்கள் விசாரணை இல்லாமல் நிலுவையில் உள்ளன. ஆன்லை னில் விண்ணப்பிக்கும் போது உப சான்றிதழ் இல்லாமல் கணினி ஏற்க மறுக்கிறது. இதுபோன்ற நடை முறைச் சிக்கல்களால் மனுக்கள் நிலு வையில் உள்ளன. எனவே, சான்றி தழ் உடனடியாக கிடைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை கைவிட்டு நேரில் விண்ணப்பிக்கும் முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவேண்டும்.
திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுநாயக்கர் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பழங்குடியினர் சான்றிதழ் பெற்றுள்ளனர். மாணவர்கள் அரசு கல்விஉதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் பொழுது வரு வாய் கோட்டாட்சியர் சான்றிதழ் செல்லாது என தகுதிநீக்கம் செய்து, மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்கவில்லை. எனவே, அரசு வழங்கிய சான்றி தழை ஏற்று கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தருமபுரி மாவட்டம் அரூர் சிட்லிங் ஊராட்சியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்காக தமிழ்நாடு அரசு தலா 2 ஏக்கர் முதல் 3 ஏக்கர் வரை நிலம் டி- கார்டு பட்டா வழங்கியது. இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் பழங்குடி மக்களின் அனுபவ பட்டா நிலங்களை சேலம், நாமக்கல் மாவட்டங்களின் மாற்று சமூகத்தினர் சிலர் ஏமாற்றி அவர்களது பெயரில் போலியான முறையில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே பழங்குடி மக்களின் நிலத்தை மாற்றுசமூகத்தினர் விலைக்கு வாங்கினால் செல்லாது என்ற தமிழ்நாடு அரசு (14.03.1979)அரசாணை எண் 561 பிறப்பித்தது.
சுமார் 50 ஆண்டுகாலம் விவசா யம் செய்துவரும் பழங்குடி மலை யாளி மக்களை மாற்றுசமூகத்தை சேர்ந்தவர்கள் நிலத்தைவிட்டு வெளியேற மிரட்டி வருகின்றனர். நிலத்தை அபகரிக்க முயற்சித்து வருகின்றனர் .இதனை தடுத்து பழங்குடி மக்களின் நில உரிமை யை பாதுகாக்க வேண்டும். பழங்குடி மக்களின் நிலத்தை மீட்க மலை வாழ் மக்கள் சங்கம் தொடர்ந்து போராட்டங்களை நடத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.