தருமபுரி, ஜன.21- இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பிடமனேரியில் குப்பைகள் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசி சுகா தார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சியில் பிடம னேரி, மாந்தோப்பு குடியிருப்பு பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்ட ஊரை ஒட்டியுள்ள காலி இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு கொட்டப் படும் குப்பைகள் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாததால் அப்பகுதியில் முழுவதும் பெரும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எட்டப்படவில்லை. எனவே, இந்த பகுதியில் குப்பைத் தொட்டி வைத்து தினந் தோறும் குப்பையை எடுத்து செல்ல ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.