தருமபுரி, ஆக. 12- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பழங்குடி செயற்பாட்டாளர்களுக்கான, மாநில பயிற்சி முகாம் ஆக-12 அன்று தருமபுரியில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஏ.அம்பு ரோஸ் வரவேற்றார்.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலசெயற் குழு உறுப்பினர் என்.குணசேக ரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலபொதுச்செய லாளர் கே.சாமுவேல்ராஜ், தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இரா. சரவணன், பொருளாளர் ஆ. பொன்னுசாமி, மாவட்டச் செயலா ளர் கே.என்.மல்லையன், மாநில துணைசெயலாளர் அ.கண்ணகி, மாநிலத்துணைத்தலைவர்கள் ஏ.வி.சண்முகம், வி.சின்னமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றினர்.
உரிமைப்போராட்டம்
முன்னதாக, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு பேசுகை யில், தமிழகத்தில் பழங்குடி மக்களின் நலனுக்காகவும் பழங்குடி மக்கள் பாதிக்கப்படும் பொழுது, பாதுகாக்கின்ற அமைப்பாக வும், உரிமைகளை போராடி பெற்றுத் தரும் சங்கமாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் செயல்படுகிறது. பல்வேறு வகை யான பழங்குடி மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்காமல் அவர் களின் வாழ்வாதாரம் அவர் களின் சந்ததியர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்கன்பாளை யத்தில் காட்டுநாயக்கர் என்ற பழங்குடி மக்களுக்கு எஸ்டி சான்றி தழ் கேட்டு, 28 ஆண்டுகாலம், ஒரு தலைமுறையே போராடியுள்ள னர். அங்கிருந்த கோட்டாட்சியர் கள் வழங்க மறுத்துள்ளனர். இந்த பழங்குடி மக்களின் பொருளா தாரத்தில் வாழ்வாதாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவர்கள் சந்ததியினர் கல்வி, வேலைவாய்ப்பு பெற முடிய வில்லை.
பிறகு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்டத்தின் விளைவாக 36 சான்றிதழ்கள் பெற முடிந்தது. இனச்சான்றிதழ்பெற்ற பிறகு கல்வி வேலை வாய்ப்பு அர சின் நலத்திட்டங்கள் பெற முடிந்தது. இப்படி தொடர்ந்து மலைவாழ் மக்க ளின் உரிமைகளை பெறுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம் என்றார்.
வன்கொடுமைத் தடுப்பு சட்டம்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலபொதுச்செய லாளர் கே.சாமுவேல்ராஜ் பேசுகை யில், தமிழ்நாட்டில் 1989 ஆம் ஆண்டு தான் வன்கொடுமை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. பிசிஆர் சட்டம் என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டது. மற்ற சமூ கத்தினருக்குள் ஒருவருக்கொரு வர் மோதல் என்றால் அது தனிப் பட்ட விவகாரம். ஆனால், பட்டியல் மற்றும் பழங்குடி மக்கள் மீது மாற்றுச் சமூகத்தினர் தாக்கினால் அது தனிப்பட்ட விவகாரம் கிடை யாது. சாதிய காரணங்களால் தாக்கப்படுவதாக கருதப்படும். இதனை வன்கொடுமை என்று சொல்லலாம். இதனால் எஸ்சி/ எஸ்டி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கண்டு பயப்படு கிறார்கள். இந்த சட்டம் தேவை யில்லை என்று எதிர்க்கிறார்கள்.
ஏன் என்றால் எஸ்சி/எஸ்டி வன்கொடு தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டால், ஜாமீனில் வெளிவரமுடியாது. அது மட்டுமல்லாமல் வன்கொடுமை யால் ஒருவர் கொலை செய்யப் பட்டால் எட்டேமுக்கால் 8.75 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும். இதனால் பல போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர்.
உலகத்திலேயே இந்தியாவில் மட்டும் தான் சாதி அடிப்படையில் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கிறது.
மலக்குழி மரணங்கள் தொடர்ந்து நடந்துவருகிறது. இப்படி இறந்த வர்களுக்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையில், நாம் போராடி ரூ. 2 லட்சம் முதல் படிப்படியாக இன்று ரூ.30 லட்சம் வரை பெற்றுத் தந்துள்ளோம்.
மலக்குழி மரணத்தை தடுக்க இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம்.
பூர்வகுடி ஒடுக்கப்பட்ட பட்டி யல் மற்றும் பழங்குடி மக்களை பாதுகாப்பதே நம் அரசியல் பணி என்றார்.