districts

img

உணவு பாதுகாப்புத்துறையினர் விழிப்புணர்வு

தருமபுரி, ஜூன் 11- கடத்தூரில், நடமாடும் உணவு பகுப் பாய்வு வாகனம் மூலம் உணவு பாது காப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். தருமபுரி மாவட்டத்தில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனமுடன் சென்று உணவு பாதுகாப்புத்துறை செயல்பாடுகள், ஆய்வக வாகனத்தின் அம்சங்கள், உணவுப் பொருட்க ளில் கலப்படம் உள்ளிட்டவை குறித்து அதி காரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்ற னர்.

அதன்ஒருபகுதியாக கடத்தூர் பேருந்து நிலையத்தில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் சேலம் ஆய்வக இளநிலை பொது பகுப் பாய்வாளர் கார்த்திகேயன், பகுப்பாய்வு வாகன ஓட்டுனர் ரகுநாதன் உள்ளிட்ட குழுவி னர், உணவு பாதுகாப்பு நடமாடும் வாகனம் மூலம், உணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிதல் மற்றும் உணவுப்பொருள் பாக் கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து காணொளி காட்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  

மேலும், தேயிலை, தேன், பால், நெய், சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி உள்ளிட்ட உணவுப்பொருட்களில் நேரடியாக கலப்ப டம் கண்டறிதல் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் முத்தா னூர் ஊராட்சி மன்றத் தலைவர் வடிவேல், பேருந்து நிலைய வளாக கடை விற்பனையா ளர்கள், பணியாளர்கள், பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள், பொதுமக்கள் என நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.