districts

img

தருமபுரி தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி வாக்காளர்களுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் நன்றி

தருமபுரி, ஜூன் 5- தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அமைச்சர் பன்னீர்செல்வம் வாக் காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றிப்பெற் றதற்கான சான்றிதழை பெற்ற பிறகு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கேபன்னீர்செல்வம் செய் தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆ.மணியை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் நன்றிகள் பல. இந்த வெற்றி என்பது முதல்வர் செய்த சாதனைக்காகனது. மகளிர் உரி மைத்தொகை, மாணவர்களுக்கான கல்வி  திட்டங்கள் உள்ளிட்ட முதல்வரின் மூன் றாண்டு சாதனைக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர், என்றார். அதனைத்தொ டர்ந்து தருமபுரியில் உள்ள பெரியார், அம் பேத்கர், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நி கழ்ச்சிகளில் திமுக தருமபுரி கிழக்கு மாவட் டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மேற்கு மாவட்டச் செயலாளர் பா.பழனி யப்பன், தருமபுரி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், நகரச் செயலாளர் நாட்டான் மாது உள் ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற னர்.