districts

img

வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம்

தருமபுரி, நவ.26- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளை புறக் கணித்து தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற  விதித்திருத்த அரசாணையை உடனடியாக வெளியிட வேண் டும். மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்ச வரம்பினை 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, மீண்டும் 25 சதவிகிதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி மாவட்டத் தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் செவ்வாயன்று முதல் பணிகளை புறக்கணித்து, ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் முழுவதும் 330 வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 320 பேர் பணிகளை புறக்கணித்து தொடர் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வருவாய்த் துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

சேலம்

சேலத்தில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் அருள் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்டம் முழுவதும் நடைபெறும் இப்போராட்டங்களில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ள னர். இப்போராட்டங்களில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அர்த்தனாரி, பொருளாளர் அகிலன், மாவட்ட நிர்வா கிகள் முருகபூபதி, சுமதி, மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநில துணை நிர்வாகி சிங்கராயன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

கோவை

கோவையில் நடைபெற்ற போராட்டத்திற்கு, வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சி.அபிப்  ரஹ்மான் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சங்கர், வட்டக்கிளைத் தலைவர் என்.மகேஷ்குமார் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், ஏராள மான வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.