districts

img

சரக்கு வாகனத்தில் குட்கா கடத்தல்: ஒருவர் கைது

தருமபுரி, ஜூன் 14- பாலக்கோடு அருகே சரக்கு வாகனத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கி டமாக வந்த சரக்கு வாகனம் ஒன்றினை போலீ சார் நிறுத்த சொல்லியும், வாகனம் நிற்காமல் போனது. இதனால் பெரியாம்பட்டி பகுதியில் அந்த சரக்கு வாகனத்தினை மடக்கி பிடித்த னர். அப்போது வாகனத்திலிருந்த இருவரில் ஒருவர் தப்பியோடிய நிலையில் ஒருவர் பிடிப்பட்டார். தொடர்ந்து வாகனத்தினை திறந்து சோதனையிட்டபோது, 65 மூட்டை களில் சுமார் 750 கிலோ அளவிலான குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து குட்காவுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், மைசூ ரைச் சேர்ந்த சுரேஷ் (33) என்பவரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மைசூ ரைச் சேர்ந்த சசாங்க் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பிடிப்பட்டுள்ள குட்கா பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.