அம்மாபேட்டை, ஜூலை 22 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வில் பாபநாசம் ஒன்றியம், அம்மாபேட்டை ஒன்றியம் என இரண்டு ஒன்றியங்களும், பாப நாசம், அய்யம்பேட்டை, மெலட்டூர், அம்மா பேட்டை என 4 பேரூராட்சிகளும் அடங்கி யுள்ளன. அம்மாப்பேட்டை ஒன்றியம் கிட்டத்தட்ட 46 ஊராட்சிகளையும், மெலட்டூர், அம்மாபேட்டை என இரண்டு பேரூராட்சி களையும் உள்ளடக்கியது. இது மட்டுமின்றி இதனுடைய எல்லை மேற்கில் ஒரத்தநாடு பகுதி வரையிலும், தென் கிழக்கில் மன்னார் குடி மற்றும் நீடாமங்கலம் வரையிலும் பரந்து உள்ளது. குறிப்பாக அம்மாப்பேட்டை, சூழியக் கோட்டை, அருந்தவபுரம், திருபுவனம், ஆர்சுத்திபட்டு, தளவாபாளையம் போன்ற பகுதிகளிலிருந்து வருவாய்த் துறை சம்பந்த மாக சாதிச் சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட சான்றுகளைப் பெறவும், பட்டா மாறுதல் செய்யவும் 30 கி.மீட்டர் பயணம் செய்துதான் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் வர வேண்டி யுள்ளது. இதற்கே ஒரு நாள் முழுவதும் ஆகிற காரணத்தால், பொதுமக்கள் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். அம்மாப்பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தை தரம் உயர்த்த வேண்டும். அம்மாப் பேட்டையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை மக்கள் முன்வைத்துள்ள னர். எனவே பாபநாசம் தாலுகாவிலிருந்து அம்மாப்பேட்டையை தனியாக பிரித்து, தனி தாலுகாவாக அறிவித்திட வேண்டு மென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.