districts

மயிலாடுதுறை - செங்கோட்டை ரயிலுக்கு வரவேற்பு

தஞ்சாவூர், அக்.26 -  மயிலாடுதுறை - செங்கோட்டை இடையே  திங்கள்கிழமை முதல் இயக்கப்பட்ட புதிய விரைவு ரயிலுக்கு தஞ்சாவூர் ரயில் நிலை யத்தில், ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தி னர் வரவேற்பளித்தனர். செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூருக்கு மெயின் லைன் எனப்படும் தஞ்சாவூர் வழியாக கடந்த 25 ஆண்டு களுக்கு முன்பாக பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் சேவை காலப் போக்கில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில்  இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என  ரயில் பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இதை யடுத்து தெற்கு ரயில்வே நிர்வாகம் திங்கள் கிழமை முதல் மயிலாடுதுறை - செங்கோட்டை இடையே முன்பதிவில்லா விரைவு ரயிலை இயக்கியது.  இந்த ரயிலுக்கு வரவேற்பளிக்கும் வித மாக தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயில் உப யோகிப்பாளர் சங்கத்தின் தலைவர் அய்யனா புரம் க.நடராஜன், செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், உமர்முக்தர், பேராசிரி யர்கள் திருமேனி, செல்வகணேசன், ஹாஜா முகைதீன் ஆகியோர் ரயில் ஓட்டுநர் களுக்கு பொன்னாடை போர்த்தி, இனிப்பு களை வழங்கினர். மேலும் ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கினர்.