தஞ்சாவூர், ஆக.6 - கடந்த இரண்டு ஆண்டுகளாக நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாததால் குடிக்க தண்ணீர் இன்றி அவதிப்படு வதாகவும், நீர்நிலைக்கு உடனே தண்ணீர் திறந்துவிட கோரியும் பொது மக்கள் ஏரிக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் செவ்வாய்க்கிழமை கடையக்குடி அய்யனார் குருக்கள் ஏரிக்குள் இறங்கி நடத்திய ஆர்ப்பாட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.பக்கிரிசாமி தலைமை வகித் தார். மாவட்டக் குழு உறுப்பினர் வெ. ஜீவக்குமார் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ஜோசப் எடிசன், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பூதலூர் ஒன்றி யச் செயலாளர் உதயகுமார், விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றி யச் செயலாளர் மெய்யழகன், கடையக் குடியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், “கல்லணையிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் கடையக் குடி உள்ளது. இந்த ஊரில் 130 வீடுகளில் 1,500 பேர் வசித்து வருகிறோம். முழுவ தும் விவசாயம் சார்ந்த ஊர். இங்குள்ள அய்யனார் குருக்கள் ஏரி மூலம் சாகு படி செய்து வருகிறோம். இந்த ஏரிக்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து தண்ணீர் வரும். ஆனால் கடந் தாண்டு வராததால் ஏரியும் வறண்டது. விவசாயமும் செய்ய முடியவில்லை. இதனால் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அருகில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தலூரி லிருந்து குடிநீர் குழாய் மூலம் கடை யக்குடிக்கு கொண்டு வந்து விநியோகம் செய்யப்படுகிறது. அதனால் எங்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை.
தற்போது காவிரி நீர், கொள்ளிடம் ஆற்றில் உபரியாக திறந்துவிடப்பட்டு, வீணாகக் கடலில் கலக்கிறது. அதே நேரத்தில் எங்களது ஊருக்கு வாய்க் கால் மூலம் தண்ணீர் வரவில்லை. இந்த ஆண்டாவது நாங்கள் விவசாயம் செய்யவும், குடிநீர்த் தட்டுப்பாடு இல்லா மல் இருக்கவும் உடனே தண்ணீர் திறக்க வேண்டும்” என்றனர்.