தஞ்சாவூர், ஜன.31- மகாத்மா காந்தி 75 ஆவது நினைவு தினத்தை முன்னி ட்டு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், தீண் டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில், ஞாயிறன்று தஞ்சாவூரில் மகாத்மா காந்தியின் சிலை க்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கோ.நீலமேகம் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் பி.செந்தில்குமார், என்.சிவகுரு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.குரு சாமி, என்.சரவணன், இந்திய மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜி.அர விந்தசாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே. அருளரசன், சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மாநகரக் குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். பூதலூர் வடக்கு ஒன்றி யம், திருக்காட்டுப்பள்ளியில் உள்ள காந்தி சிலைக்கு, தமுஎ கச கிளை தலைவர் பி.ஆயி ராசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி, மாவட்ட துணைச் செயலா ளர் பி.எம்.இளங்கோவன், திருக்காட்டுப்பள்ளி தமுஎகச கிளைத் தலைவர் பி.தாம ரைச்செல்வன் முன்னிலை வகித்தார்.
வலங்கைமான்
வாலிபர் சங்கம் வலங் கைமான் ஒன்றியம் சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி ஆலங் குடி கடைவீதியில் உள்ள காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயராஜ் தலைமை வகித்தார். காந்தி யின் தியாகத்தை பற்றி தமிழ் நாடு அறிவியல் இயக்க ஒன்றிய செயலாளர் பி.பிரபா கரன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சிஐடியு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.