கும்பகோணம், மே 22- கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி (தன்னாட்சி) முனைவர் பட்ட ஆய்வு சுருக்க தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் துரையரசன் தலைமை வகித்தார். தஞ்சை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கா.எழிலன் முன்னிலை வகித்தார். முனைவர் பட்ட ஆய்வு சுருக்க தொகுப்பு நூலை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி வெளியிட்டார். தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன், பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன். துணை மேயர் தமிழழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.