கும்பகோணம், பிப்.17- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பேரூராட்சி 8-ஆவது வார்டில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பிர மணியன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக 8-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் அறிவு ராணி தலைமையில் மாதர் சங்கத்தினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.