தஞ்சாவூர், டிச.30- திருமண்டங்குடி திருஆரூ ரான் சர்க்கரை ஆலை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் பிரச்ச னைக்கு தீர்வு காணக் கோரி, நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத் திலிருந்து விவசாயிகள் வெளி நடப்பு செய்தனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. கூடு தல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா தலைமை வகித்தார். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி செந்தில்குமாரி, வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நா.உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்க ளின் இணைப் பதிவாளர் சி.தமிழ் நங்கை உள்ளிட்ட அரசு அலுவ லர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும், விவ சாயிகள் அனைவரும் எழுந்து கூடு தல் ஆட்சியர் முன்பாக, திரு மண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளை ஏமாற்றி, அவர்க ளின் பெயரில் வங்கியில் பல கோடி ரூபாய் வாங்கி மோசடி செய் துள்ளது. மேலும் விவசாயி களுக்கு தர வேண்டிய தொ கையை வழங்காமல் ஆலை நிர்வாகம் வஞ்சித்துள்ளது. இது தொடர்பாக கரும்பு விவ சாயிகள் கடந்த 31 நாட்களாக தொ டர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். இந்த பிரச்ச னைக்கு மாவட்ட நிர்வாகம் உடன டியாக தீர்வு காண வேண்டி விவசா யிகள் வெளிநடப்பு செய்வதாக கூறி, முழக்கங்களை எழுப்பிய வாறு வெளியே வந்தனர். பின்னர் நடைபெற்ற கூட்டத் தில் விவசாயிகள் பேசியதாவது: சம்பா நெல் அறுவடை தொடங் கியுள்ளதால், மதுக்கூர் பகுதி களில் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங் களை திறக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான பணியாளர்களை தற்போதே தேர்வு செய்து, பணி யமர்த்துவதற்கு தயாராக வைக்க வேண்டும். சம்பா நெல் அறு வடைக்கு தேவையான, அறு வடை இயந்திரங்களை முன்கூட் டியே போதிய அளவுக்கு வர வழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களின் பங்குத் தொகையை அவர்களின் கணக்கில் வரவு வைக்க வேண் டும்.
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கழிவு நீரை குளத்தில் விடு வதால் கால்நடைகள் பாதிக்கப் படுகின்றன. எனவே கழிவு நீரை சுத்திகரித்து மறு பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் கால்நடைகளை அம்மை நோய் தாக்கி வருவதால், தடுப்பூசி செலுத்த போதிய முகாம் அமைக்க வேண்டும். திருவையாறு பகுதியில் அனு மதியின்றி பல இடங்களில் பாசன வாய்க்கால்களை தூர்த்தும், 30 அடி ஆழத்துக்கு மண் எடுத்தும் அமைக்கப்பட்டுள்ள செங்கல் சூளைகளால் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். கூடுதல் ஆட்சியர் என்.ஓ. சுகபுத்ரா பேசுகையில், “பட்டா மாறுதல் கேட்டு மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் வரை 13 ஆயிரம் விண்ணப்பங்கள் இருந்தது. இதற்காக “மிஷன் தஞ்சாவூர்” என்ற திட்டம் வகுக்கப் பட்டு பிரத்யேக நில அளவை யர்களை கொண்டு பட்டா மாறு தல் வழங்கப்பட்டது. தற்போது 5,700 விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. இதையும் விரைந்து முடிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதத்தில் அனைத்து விண்ணப்பங் களுக்கும் தீர்வு காணப்படும். வருவாய்த்துறை சார்பில் வழங் கப்படும் அனைத்து சான்றுகளும் 15 தினங்களுக்குள் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கால்நடைகளுக்கான அம்மை நோயை தடுக்க தடுப்பூசி முகாம் அமைக்கப்படும். தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்” என்றார்.
விவசாயிகள் சங்கம்
இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது: திருமண்டங்குடி திருஆரூ ரான் சர்க்கரை ஆலை விவசாயி களுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகளின் சிபில் பிரச்சனை க்கு தீர்வு காண வேண்டும். எல்சிஎல்டி மோசடி குறித்து விரி வான விசாரணை நடத்த வேண்டும். தீர்ப்பாயத்தில் மாவட்ட நிர்வா கத்தின் நிலைப்பாட்டை வெளிப் படையாக விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். புதிய நிர்வா கத்தின் (கால்ஸ்) சட்டவிரோத நட வடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். சம்பா நெல் அறுவடை பணி களுக்கு போதுமான இயந்திரம் கிடைத்திடவும், வாடகையை முறைப்படுத்த முத்தரப்பு கூட்டம் நடத்தி, அதன் முடிவு அடிப்படை யில் வாடகை வசூலிக்க மறைமுக குழு ஒன்றை உருவாக்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்தபட்சம் 25 விழுக் காடு அறுவடை இயந்திரம் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சம்பா அறுவடை பணி கள் துவங்க உள்ள நிலையில், தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திடவும், பணியாளர்கள் விவ சாயிகளிடமிருந்து உடனடியாக நெல் கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்தவும், தேவையான சாக்கு, தார்ப்பாய், எடை மெஷின் உள்ளிட்ட உட்கட்ட மைப்பு வசதிகளையும் செய்திட வேண்டும். திருப்பனந்தாள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை நிரந்தர மாக உரிய கட்டமைப்பு வசதிகளு டன் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாண்டு பருத்தி கொள்முதலை பாதுகாப் பாக செய்திடவும், அம்மா பேட்டை, மெலட்டூர் வேளாண் விரி வாக்க மையங்களை திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாண்டு இப்பகுதியில் உளுந்து சாகுபடியை மேம்படுத்த சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். திருவையாறு புற வழிச்சாலைக்கு நிலம் கையகப் படுத்தும் போது 2013 நிலம் கைய கப்படுத்தும் சட்டத்தின் அடிப்ப டையில், நிலத்துக்கான சந்தை மதிப்பிலிருந்து கூடுதலாக நான்கு மடங்கை விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும். தஞ்சை - நாகப்பட்டினம் புறவழிச்சாலை யில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து, நான்கு வழிச்சாலையை முறையாக பராமரிக்க வேண் டும்”. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.