districts

img

தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தஞ்சாவூரில் 36 ஆண்டுச் சந்தா வழங்கல்

தஞ்சாவூர், ஜூலை 9-  தஞ்சை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்டக் குழு ஏற்பாட்டில் தீக்கதிர் சிறப்பு சந்தா சேர்ப்பு நிகழ்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இதையொட்டி, தஞ்சை மாநகரம் மற்றும் இதர அரங்கங்கள் சார்பில் தீக்கதிர்  சந்தா வழங்கும் நிகழ்ச்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது.  

இதில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், தஞ்சை மாவட்ட பொறுப்பாளருமான உ.வாசுகியிடம் முதல் கட்டமாக 36 ஆண்டுச் சந்தா, 72 அரையாண்டு சந்தா என 108 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கப்பட்டன.  இதேபோல் பூதலூர் தெற்கு ஒன்றியம், செங்கிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர்  தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியனிடம் தீக்கதிர்  சந்தா வழங்கப்பட்டது.  இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தமிழ்ச்செல்வி, கே.பக்கிரிசாமி, என்.சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  பூதலூர் வடக்கு ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியனிடம் 11 அரையாண்டுக்கான தீக்கதிர் சந்தா வழங்கப்பட்டது. திருவையாறு ஒன்றியம் கண்டியூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செய லாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியனிடம் 4 ஆண்டுச் சந்தா, 7 அரை யாண்டுக்கான தீக்கதிர் சந்தா வழங்கப்பட்டது.