தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, சாலியமங்கலத்திலிருந்து சடையார் கோவில் செல்லும் சாலையில், ரயில்வே கேட்டை ஒட்டியுள்ள சாலை குண்டும், குழியுமாகக் இருப்பதால், வாகன ஓட்டிகளை தடுமாறச் செய்து விபத்து நேரிடுகிறது. இந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, ரயில்வே கேட்டை ஒட்டியுள்ள குண்டும், குழியுமான சாலையைச் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.