தஞ்சாவூர், ஜன.21- தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மற்றும் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரிகளில் உயர்கல்வித்துறை சார்பில் ரூ.5.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார். தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் தமிழ் துறை, வணிகவியல் துறை, ஆங்கிலத்துறை, புள்ளியல் துறை என நான்கு துறைகளுக்கான 20 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் எம்எல்ஏ டிகே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் எழிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் 12 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டதையும் முதல்வர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.