தஞ்சாவூர், பிப்.17-- தஞ்சாவூர் மாநகராட்சி 35 ஆவது வார் டில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், சிபிஎம் வேட்பா ளர் எம்.வைஜெயந்தி மாலா போட்டியிடு கிறார். வியாழனன்று, இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அவர், தஞ்சாவூர் அன்பு நகர், பூக்கார புது லாயம், மன்னையார் தெரு, பூக்கார வஸ்தா தெரு என 35 ஆவது வார்டு முழுவதும் வீடு, வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி. கண்ணன், பி.செந்தில்குமார், மாநகரச் செய லாளர் வடிவேலன், கிளைச் செயலாளர் எஸ். லூகாஸ், நிர்வாகிகள் த.முருகேசன், கரிகா லன், மணிமாறன், திருநாவுக்கரசு, ஜோதி மணி, உள்ளிட்டோர் உடன் சென்றனர்.