தஞ்சாவூர், ஜூலை 17- கண்ணுக்குடி கடைக்கு மேற்பார் வையாளரை நியமிக்க கோரி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு, தஞ்சா வூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.மதியழகன் தலைமை வகித்தார். மாவட்டப் பொரு ளாளர் ஏ.ஜி.பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலா ளர் சி.ஜெயபால் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.வீரையன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
ஒரத்தநாடு வட்டம் கண்ணுக்குடி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் பதவிக்கு பணி மூப்பு அடிப்படையில் மேற்பார்வையாளரை நியமனம் செய்ய வேண்டும். வேறு கடையில் மேற்பார்வையாளராக உள்ளவரை கூடுதல் பொறுப்பாக அனுமதிப்பதை கைவிட வேண்டும். மதுபான பாட்டில் களை சட்ட விரோதமாக விற்பனை செய்யும் பார் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை பொறுப்பாக்கி பொய் வழக்குப் போடுவதை கைவிட வேண்டும்.
மதுபான கடையில் நீண்ட நாட்க ளாக ஒரே இடத்தில் மேற்பார்வையாள ராக உள்ளவர்களை பணிமாறுதல் செய்ய வேண்டும். சுழற்சி முறையில் ஊழியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங் கள் எழுப்பப்பட்டன. இதில் டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட, ஒன்றிய நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.