கும்பகோணம், ஜன.29- கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் தஞ்சை மாவட்ட அளவிலான சதுரங்கம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மிகவும் ஆர்வ மாக கலந்து கொண்டனர். மாணவ மாணவியர்களுக்கு பள்ளி தாளாளர் கார்த்தி கேயன் பதக்கங்களையும் சான்றுகளையும் வழங்கினார். மேலும் மாணவ மாணவியர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக சான்றிதழ்களை பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார்.