தஞ்சாவூர், ஆக.20 - காலந்தோறும் தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் வாணிபத்தின் மூலம் தமிழ் வளர்ந்தமைக்குத் தமிழக வணிகர்கள் குழு காரணமாக இருந்தது என சிங்கப்பூர்தேசியப் பல்கலைக்கழ கத்தின் பேராசிரியர் அ.வீரமணி குறிப் பிட்டார்.
தமிழ்ப் பல்கலைக்கழக அயல் நாட்டுத்தமிழ்க்கல்வித்துறையில் அய லகத்தமிழ் என்னும் தலைப்பிலான சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.
சொற்பொழிவரங்கத்திற்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில், சிறப்புச் சொற்பொழிவாளராகக் கலந்து கொண்ட சிங்கப்பூரின் சமூகவியல் துறைப்பேராசிரியரும், மியன்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தமிழின் செல்வாக்கு குறித்து தொடர் ஆய்வுகள் நிகழ்த்தி வரும் ஆய் வறிஞருமான முனைவர் வீரமணி, “தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் தமிழர் வாழ்வியல்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில், “காலந்தோறும் தெற்கு மற்றும் தென் கிழக்காசியாவில் வாணிபத்தின் மூலம் தமிழ்வளர்ந்தமைக்குத் தமிழக வணி கர்கள் குழு காரணமாக இருந்தது. வாணிபம், பண்பாட்டுப் பரவல் மற்றும் போர்கள் ஆகிய காரணங்களுக்காகப் பழங் காலத்திலும் இடைக்காலத்திலும் தென்கிழக்காசிய தீபகற்பம் முழுவதும் பரவிச் சென்ற தமிழர்கள் தமிழை வளர்த்தனர்” என வரைபடங்கள் மற்றும் தொல்லியல்சான்றுகளுடன் எடுத்து ரைத்தார்.
வளர்தமிழ்ப் புல முதன்மையரும் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறைத் தலைவருமாகிய முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் நோக்கவுரை நிகழ்த்தினார். இந்த, ஆய்வுச் சொற் பொழிவில் பங்கேற்ற பல்துறையைச் சேர்ந்த மாணவர்கள், தென்கிழக்காசி யாவில் தமிழர்களின் ஆளுமை, படையெடுப்பு போன்ற தலைப்பு களில்கலந்துரையாடினர்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக நிதிஅலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பேரா சிரியர் ஞா.பழனிவேலு உள்ளிட்ட ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.