கும்பகோணம், ஜூன் 2- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா வில் கும்பகோணம் -மயிலாடுதுறை சாலை விரி வாக்கப் பணி நடைபெற்று வருகிறது. சாலையோரம் உள்ள பழமையான மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப் பட்டு வருகின்றன. இந்நிலையில் நரசிங்கன்பேட்டை கஸ்தூரி அம்மன் கோயில் அருகில் மரத்தின் வேர்களை பெயர்த்து எடுக்கும்போது மண்ணுக்குள் புதைந்திருந்த இரண்டு கருங்கல் சிலைகள் மீட்கப்பட்டன. மூன்று அடி உயரம் உள்ள அப்பர், திருஞான சம்பந்தர் சிலைகள் அடி பீடத்துடன் கிடைத்தது. இதுபற்றி நரசிங்கன்பேட்டை பஞ்சாயத்து தலைவர் மாலதி சதீஷ்ராஜ் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.