தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவர்கள் திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் (தன்னாட்சி) கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான டெக்னிக்கல் சிம்போசியம் டெக்னாலஜி-23 போட்டியில் கலந்து கொண்டனர். இதில் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் அபினேஷ்வரன் வெப் டிசைனிங்கில் இரண்டாம் இடம், வீடியோ எடிட்டிங்கில் முதல் இடம் பெற்றார். சாதனை மாணவரை கல்லூரி முதல்வர் (பொ) சி.இராணி, பேராசிரியர்கள் பாராட்டினர்.