districts

img

மாநில அளவிலான கையுந்து பந்து போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவிகள் தேர்வு

தஞ்சாவூர், அக்.14 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அணி, கடந்த செவ்வாய்க்கிழமை தஞ்சை  அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் மேலோர் பிரிவில் மாவட்ட அளவில் முதலி டம் பெற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற தன் மூலம், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.  போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை களை, பள்ளி தலைமை ஆசிரியை வீ.சாந்தி,  உதவி தலைமை ஆசிரியர் சுப.கார்த்திகே யன், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியா ளர், ஆசிரியர்கள் பாராட்டினர். அதேபோல், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், பேரூராட்சி தலைவர் சாந்தி  சேகர் ஆகியோரும் வெற்றி பெற்ற வீராங்க னைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

;