தஞ்சாவூர், மார்ச் 12 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மெரினா உணவக மேல்மாடி கூட்ட அரங்கில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்கம், பட்டுக்கோட்டை வட்டக்கிளை சார்பில், சர்வ தேச மகளிர் தின விழா மற்றும் 83 ஆவது மாதாந்தி ரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பாரதி பேரி யக்கம் முன்னாள் செயலா ளர் இரெ.கௌரி தலைமை வகித்தார். மனநல ஆலோ சகர் மா.நளினி வரவேற்றார். தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் இல. சந்தானலெட்சுமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில மகளிர் துணைக் குழு உறுப்பி னர் ச.செல்வி, பெண் சிங்கங் கள் குழு ஒருங்கிணைப்பா ளர் வீ.திரிபுரா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தஞ்சாவூர் பாரத் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் செயலாளர் புனிதா கணேசன், “பெண்ணுக்குள் ஞானம் வைத்தான்” என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றினார். ஓய்வு ஆசிரியை பா.செந்தமிழ்ச் செல்வி நன்றி கூறினார். அரசு அலுவலகங்களில் பெண் ஊழியர்களுக்கு என தனி ஓய்வறை, கழிப்பறை வசதி, மாற்றுத் திறனாளி களுக்கான தனி கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மாவட்டந்தோ றும் பெண் ஊழியர்களுக்கு தங்கும் விடுதி கட்டித் தர வேண்டும். அரசு அலுவலக வளாகங்களில் குழந்தைகள் காப்பகம் அமைத்து தர வேண்டும். குடும்ப வாழ்க்கை, குழந்தைகளின் கல்வியை பாதிக்கும் வகை யில் ஊழியர்களை பணி இட மாற்றம் செய்யக்கூடாது. கணவன், மனைவி ஒரே ஊரில் பணி செய்யும் வகை யில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். பணியிடங்க ளில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், வன்முறைகள், சீண்டல் களை தடுத்திட, உச்சநீதி மன்ற வழிகாட்டுதலின்படி குழு அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. ஓய்வூதியர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்ற ஓய்வூதியர் சங்க கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் கண. கல்யாணம் அஞ்சலி தீர்மா னம் வாசித்தார். பொருளா ளர் அறிக்கையை எஸ்.ஆறு முகம் வாசித்தார். செயலா ளர் அண்ணாதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் புரு சோத்தமன், தீக்கதிர் சா.வீர மணி, துணைத் தலைவர் தமி ழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவுப் பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.