districts

img

சேதுபாவாசத்திரம் கடைவீதியில் உயர் கோபுர மின்விளக்கு சீரமைக்கப்படுமா?

தஞ்சாவூர், ஜூன் 10-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் கடைவீதியில் கிழக்கு கடற் கரை சாலையில் மூன்று சாலைகள் சந்திக்கும் முக்கிய இடத்தில், பேருந்து நிலையம் அருகே, கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு, பல லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.  கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 16  ஆம் தேதி வீசிய கஜா புயலின் போது,  இந்த உயர் கோபுர மின் விளக்கு சேத மடைந்தது. தற்போது இதில் உள்ள ஆறு  மின்விளக்குகளில், இரண்டு மட்டுமே  உள்ளது. இதிலும் ஒரு மின்விளக்கு மட்டுமே ஒளிர்கிறது.  இந்த விளக்குகள் ஒளிராததால், இப்பகுதியே இருள டைந்து காணப்படுகிறது. இரவு நேரங் களில் பெண்கள் பேருந்து நிலையத்தில்  காத்திருக்க அச்சப்படும் நிலை உள்ளது.  இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப் பட்ட துறையினர் இந்த உயர்கோபுர மின்  விளக்கை சீரமைத்து, அனைத்து விளக்குகளும் ஒளிரும் வகையில் புதிதாக அமைத்து தர வேண்டும் என  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

;