கும்பகோணம், பிப்.24- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டி மாணவர்களுக்கு தனி பிரிவாகவும், மாணவியர்களுக்கு தனி பிரிவாகவும் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற அணிக்கு தங்கப்பதக்கமும் இரண்டாவதாக வெற்றி பெற்ற அணிக்கு வெள்ளி பதக்கமும் சான்றிதழ்களையும் பரிசினையும் கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கி சிறப்பித்தார். போட்டியினை ஏற்பாடு செய்திருந்த பள்ளி தாளாளர் கார்த்திகேயனுக்கு மாணவ, மாணவியர்கள் நன்றியை தெரிவித்தனர்.