கும்பகோணம், நவ.2- தொன்மையான 20 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சர்வதேச சிலை கடத்தல் குற்றவாளி சுபாஷ் சந்திரகபூர் உட்பட 6 பேருக்கு தலா 10 ஆண்டு கள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. அரியலூர் மாவட்டம், சுத்த மல்லி வரதராஜ பெருமாள் ஆல யத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்த தொன்மையான 20 ஐம்பொன் சிலைகள் கடந்த 2008ம் ஆண்டில் கொள்ளையடிக் கப்பட்டன. இது தொடர்பாக விக்ரமங்க லம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சர்வதேச சிலை கடத்தல் குற்ற வாளி சுபாஷ் சந்திரகபூருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2012ம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் இருந்த சுபாஷ் சந்திர கபூரை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். சுத்தமல்லி வரதராஜ பெரு மாள் கோயிலில் கொள்ளை அடிக் கப்பட்ட சிலைகளில் நடராஜர், விநாயகர், வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, சக்கரத்தாழ் வார் ஆகிய 6 சிலைகள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட் டனர். இதில் சுபாஷ் சந்திர கபூர் விசாரணை கைதியாக சிறையில் உள்ளார். பாக்கியகுமார் என்பவர் மற் றொரு வழக்கில் சென்னை சிறை யில் உள்ளார். மற்ற குற்றவாளிகள் பிணையில் உள்ளனர். இந்த வழக் கில் குற்றம் சாட்டப்பட்ட சிதம்ப ரத்தை சேர்ந்த பிச்சுமணி (60) என்ப வர் அப்ரூவராக மாறியுள்ளார். இந்த வழக்குகள் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண் டம் குற்றவியல் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த சிலை திருட்டு வழக்குகள் அனைத்தும் கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை குற்ற வியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட் டது. இதைத் தொடர்ந்து, சுபாஷ் சந்திரகபூர் மீதான வழக்குகள் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, இந்த பரபரப்பான சிலை திருட்டு வழக்கு கும்ப கோணம் கூடுதல் தலைமை குற்ற வியல் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை, செவ்வாய்க் கிழமை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நாட்டின் கலாச்சாரத்தை சீர ழிக்கும் வகையில் இவர்களின் செயல்பாடு இருந்ததாக கூறி இவர்களுக்கு நீதிபதி சண்முகப் பிரியா தீர்ப்பு வழங்கினார். தீர்ப் பில், குற்றம் சாட்டப்பட்ட சுபாஷ் சந்திர கபூர் (73) மற்றும் சென்னை யை சேர்ந்த சஞ்சீவ் அசோகன் (60), பாக்கியகுமார் (50), மதுரை யை சேர்ந்த மாரிச்சாமி (65), ஸ்ரீராம் என்கிற சுலோகு (52), பார்த்திபன் (55) ஆகிய 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், குற்றவாளி சுபாஷ் சந்திர கபூ ருக்கு 4 ஆயிரம் அபராதமும், மற்ற 5 குற்றவாளிகளுக்கு 8 ஆயிரம் அப ராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட மாரிச்சாமி, பார்த்திபன், ஸ்ரீராம் ஆகியோர் மதுரை மத்திய சிறைக்கும், சஞ்சீவி, அசோகன், பாக்கியகுமார் ஆகியோர் சென்னை மத்திய சிறைக்கும், சுபாஷ் சந்திர கபூர் திருச்சி மத்திய சிறைக்கும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்.