தஞ்சாவூர், டிச.1- நிழற்குடை அமைப்ப தற்காக வந்த நிதியை வட் டார வளர்ச்சி அலுவலர்கள் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மதுக்கூர் அருகே பொதுமக்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள சிராங்குடி கிராமத்தில் இருந்த பழைய பயணிகள் நிழற்குடை சேதமானது. இதையடுத்து, அந்த இடத் தில் புதிதாக நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில், நிழற் குடை அமைப்பதால் தங்க ளுக்கு இடையூறாக இருப்ப தாகக் கூறி, அப்பகுதியில் உள்ள தனி நபர் ஒருவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்கு விசாரணையில் இருந்து வருவதாக கூறப் படுகிறது. இந்நிலையில், மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் நிழற்குடை அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, அதற்கான நிதியை திருப்பி அனுப்பிய தாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த சிராங்குடி கிராம மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் கிருபாகரன் தலைமையில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் உள்ளிட்ட சிராங்குடி கிராமத்தைச் சேர்ந்த நூற் றுக்கும் மேற்பட்டோர் சிராங் குடி முதன்மைச் சாலையில் வியாழனன்று சாலை மறி யலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிரித்திவிராஜ் சவுகான், மதுக்கூர் ஒன்றியக் குழு தலைவர் அமுதா துரை செந்தில், மதுக்கூர் காவல் துறை ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள் ளப்பட்டது.