கும்பகோணம், மார்ச் 22- நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் கடுமையாக உயர்ந்துள்ள கோரா பட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கோராப் பட்டினை இறக்குமதி செய்து விலையை கட்டுப்படுத்த வேண்டும். கச்சா பட்டு பதுக்கலை தடுத்து நிறுத்த வேண்டும். பட்டு கொள்முதல் கார்ப்ப ரேட் மயமாவதை தடுத்து நிறுத்த வேண்டும். விலை ஏற்றத்திற்கு ஏற்ப கச்சாப்பட்டிற்கு மானியம் வழங்க வேண்டும். கைத்தறி பட்டுக்கு முழுமையாக ஜிஎஸ்டி வரி விலக்கு அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி கும்பகோணம் கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் கும்பகோணம் பட்டு ஜவுளி தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்ட தொழிற்சங் கங்களின் கூட்டமைப்பின் கும்பகோணம் பட்டு நெசவு தொழில் பாதுகாப்பு சங்கம் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தொழிற்சங்க கூட்ட மைப்பின் பொருளாளர் எஸ்.ஜே. சுப்பிர மணியன் தலைமை வகித்தார். கும்பகோ ணம் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் கே.ஜே.லெனின், செயலாளர் மோகன், சிஐடியூ கே.ஆர்.சந்திரன், கும்பகோணம் மாமன்ற உறுப்பினர் டி.ஆர்.அனந்தராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தை கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர் சங்க செய லாளர் ராயா கோவிந்தராஜன் துவக்கி வைத்தார். போராட்டத்திற்கு ஆதரவாக பட்டு கைத்தறி நெசவாளர் சம்மேளன பொதுச் செயலாளர் முத்துக்குமார், கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே.சரவணன், துணை மேயர் சு.ப. தமிழரசன், சிஐடியு மாவட்ட தலைவர் சா.ஜீவபாரதி, கைத்தறி மாவட்ட தலைவர் என்.பி.நாகேந்திரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார். உற்பத்தியாளர் சங்க டி.ஆர். நெப்போலியன் நன்றி தெரிவித்தார்.