தஞ்சாவூர், டிச.6 - மின் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் புதிய மின்மாற்றி அமைத்து தரப்படும் என அரசு அலுவலர்கள் உறுதி அளித்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப் படவிருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோகூர் கிளை சார்பாக, “அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்தும், மின்சார பற்றாக் குறையை போக்க அண்ணா வளைவு பகுதி யில் புதிய மின்மாற்றி அமைத்து தர வேண் டும்” என வலியுறுத்தி டிச. 5 ஆம் தேதி (வியா ழக்கிழமை) கல்லணை பேருந்து நிறுத்தத் தில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, டிச.4 (புதன்கிழமை) பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட் சியர் மரியஜோசப் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மின்வாரிய உதவி பொறியாளர்கள் செல்வராணி, செந்தில், அகரப்பேட்டை சரக வருவாய் ஆய்வாளர், தோகூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றியச் செயலாளர் டி.ஸ்ரீதர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தை யில், “40 நாட்களுக்குள் புதிய மின் மாற்றி அமைத்தும், மின் கம்பிகளை சரி செய்தும், தடையின்றி மின்சாரம் வழங்கப்படும்” என மின்வாரிய அலுவலர்கள் உறுதியளித்தனர். இதையேற்று நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.