districts

img

இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டம்

இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டம் திமுக சார்பில்  பாபநாசத்தில் நடைபெற்றது.திமுக  தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பாபநாசம் எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, காங்கிரஸ் மயிலாடுதுறை எம்.பி சுதா,  அம்மாப் பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச் செல்வன், தமிழ் நாடு தாட்கோ தலைவர் மதிவாணன்,  காங்கிரஸ் தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் லோகநாதன், இந்திய கம்யூனிஸ்ட்  மாவட்டச் செயலாளர் பாரதி ஆகியோர் பேசினர். பாபநாசம் பேரூர் செயலர் கபிலன் நன்றி கூறினார்.