districts

தஞ்சாவூர் சரகத்தில் தலைமை  காவலர்களுக்கு பதவி உயர்வு

 தஞ்சாவூர், மே 7- தஞ்சை சரகத்தில் 70 தலைமைக் காவலர்கள், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் கயல்விழி பிறப்பித்துள்ளார்.  தஞ்சை சரகத்திற்குட்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பணியாற்றி வரும் 66 காவல்துறை தலைமைக் காவலர்கள், 4 ஆயுதப்படை தலைமைக் காவலர்கள் என மொத்தம் 70 பேர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.  1997ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தவர்கள், தற்போது பல்வேறு மாவட்டங்களில் தலைமை காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் கடந்த நிலையில் தண்டனை ஏதுமின்றி, சீரிய முறையில் பணி செய்த நிலையில், இவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.