தஞ்சாவூர், டிச.10- தஞ்சாவூர் மாவட்டத்தில் வீர தீரச் செயல் புரிந்த 5 மாணவியர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம், ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகைக்கான காசோலைகளையும், உலக எழுத்தறிவு தினத்தையொட்டி நடைபெற்ற கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகிய வற்றில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகளையும் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில், ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.டி.லதா, பேராசிரி யர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.