தஞ்சாவூர், ஜன.18- தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஜனவரி 20 அன்று காலை 10 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறு வனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். மேலும், வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள், தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார்.