தஞ்சாவூர், ஜன.9- பொங்கல் திருவிழாவின் போது புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல்லினை பச்சரிசியாக்கி அதனை மண்பானையில் பொங்கலிட்டு இயற் கைக்கு படைக்கப்படும். இந்த நன் னாளின் போது மண்பானையில் உள்ள அரிசியை கிளறுவதற்கு அகப் பையை முன்னோர்கள் பயன் படுத்தி வந்துள்ளனர். இந்த “அகப்பை” தேங்காய் கொட்டாங்குச்சியினை சுத்தம் செய்து, அதில் மூங்கிலை சீவி இரண்டடி நீளத்தில் கைப்பிடியாக்கி பயன்படுத்தி வந்தனர். அகப்பையை பயன்படுத்தும் போது, அதன் மன மும் பொங்கல் சுவையும் அதிகமா கும். காலப்போக்கில் சில்வர், பித் தளை கரண்டிகளின் வரவால் ‘அகப்பை’ காணாமல் போனது. ஆனால் தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு என்ற கிரா மத்தில் மட்டும் பொங்கல் தினத்தன்று அகப்பையை மட்டும் பயன்படுத்து கின்றனர். இதற்காக அவ்வூரில் உள்ள தச்சுத்தொழிலாளர்கள் அகப்பை யை தயாரித்து பொங்கலன்று காலை யில் ஊர்மக்களிடம் வீடுகளுக்குச் சென்று வழங்கி விடுவார்கள். இந்த அகப்பைக்கு அவர்கள் பணம் பெறுவதில்லை. அதற்கு மாறாக ஒருபடி நெல்லும், தேங்காய், வெற் றிலை - பாக்கு, பழம் மட்டுமே பெற் றுக் கொள்கின்றனர்.
இந்த வழக்கம் இன்றளவும் தொடர்கிறது. இதுகுறித்து அகப்பை தயா ரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகை யில், ‘‘எங்களது மூதாதையர் காலந் தொட்டு நாங்கள் தச்சுத் தொழிலில் தான் ஈடுபட்டு வருகிறோம். இவ் வூரில் பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதில் ஈடுபட்டுள் ளோம். பொங்கல் பண்டிகை வந்து விட்டால் பாரம்பரியமான அகப்பை தயாரிக்கும் பணியில் இறங்கி விடு வோம். இதற்காக ஆண்டுமுழுவதும் பயன்படுத்தப்பட்ட தேங்காய் கொட் டாங்குச்சியை சேகரித்து வைத்து, பின்னர் அதனை பொங்கல் நெருங் கும் நாட்களில், நான்கைந்து தினங் கள் தண்ணீரில் ஊறவைத்து, அதனை உளியால் பக்குவமாக செதுக்கு வோம். மூங்கில் மரத்தினை வெட்டி அதில் இரண்டடி துண்டுகளாக நறுக்கி கைப் பிடி தயாரித்து, பின்னர் அதில் கொட்டாங்குச்சியை இணைத்து விட்டால் அகப்பை தயாராகிவிடும். இந்த அகப்பையை நாங்கள் யாரும் விலைக்கு விற்பனை செய்வ தில்லை. எங்களது கிராம மக்க ளுக்கு பொங்கலன்று பயன்படுத்த இதை தான் வழங்குகிறோம். நாங்கள் காலையிலேயே வீடு வீடாகச் சென்று ‘அகப்பையை’ கொடுத்து விடுவோம். பின்னர், பொங்கலன்று மதியம் எந்தந்த வீடுகளுக்கு அகப்பை கொடுத் தோமோ அங்கு சென்றால் அவர்கள் தேங்காய், பழம், வெற்றிலை - பாக்கு, ஒரு படி நெல் கொடுத்து எங்களை கவுரவிப்பார்கள். இந்த பாரம்பரியம் இன்றளவும் தொடர்வ தால் நாங்கள் இந்த தொழிலை மகிழ் வோடு செய்து வருகிறோம்’’ என்றனர்.