தஞ்சாவூர், ஜூன் 7- தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், உக்கடை ஊராட்சியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார் பில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமான நூறு நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக துவங்கி, வேலை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி, உக்கடை கிராம ஊராட்சிச் செயலா ளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பாலமுருகன் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செய லாளர் கே.பக்கிரிசாமி, ஒன்றியக் குழு உறுப் பினர் மயில்வாகனன் மற்றும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.