தஞ்சாவூர், டிச.10- தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற தமிழக அணிக்கு வீரர், வீராங்கனை கள் தேர்வு டிசம்பர் 13, 14 ஆம் தேதிகளில் நடை பெறுகிறது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் சார்பில், 2023 ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தேசிய அளவி லான போட்டிகளில் பங்கு கொள்ள வீரர்கள், வீராங்கனைகளை தேர்வு செய்ய உத்தேசிக் கப்பட்டுள்ளது. ஹாக்கி விளையாட்டுக்கு (மாணவர்கள் மட்டும்) டிசம்பர் 13-ஆம் தேதி திருச்சி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்திலும், கோ- கோ விளையாட்டுக்கு (மாணவிகள் மட்டும்) சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத் திலும், கைப்பந்து விளையாட்டிற்கு (இருபா லரும்) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிலும், கால்பந்து விளையாட்டுக்கு (மாணவிகள் மட்டும்) சென்னை ஜவஹர் லால் நேரு உள் விளையாட்டரங்கத்திலும் தேர்வு நடைபெற உள்ளது. கூடைப்பந்து விளையாட்டுக்கு (இரு பாலரும்) 14-ஆம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுகள் அனைத்தும் காலை 7 மணிக்கு நடைபெறும். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு: 01.01.2004 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும். ஆதார் கார்டு, பத்தாம் வகுப்பு மதிப் பெண் சான்றிதழ், பிறந்த தேதி சான்றிதழ், (நகராட்சி, கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.) தேர்வு போட்டியில் கலந்து கொள்பவர்கள், போட்டி நடைபெறும் இடங்களுக்குச் சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து போட்டி யில் பங்கு கொள்ள வேண்டும். எனவே, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும் திறமை உள்ள விளையாட்டு வீரர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தஞ்சை மாவட்ட அலுவலக தொலைபேசி : 04362 - 235633 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.