தஞ்சாவூர், மார்ச் 1 - தஞ்சாவூரின் மையப் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் செயல் பட்டதாக கூறி, 148 ஆண்டுகள் பழமை யான தஞ்சாவூர் யூனியன் கிளப்புக்கு, வருவாய்த்துறையினர் செவ்வாய்க் கிழமை சீல் வைத்தனர். தஞ்சாவூரில் நகராட்சிக்கு சொந்த மான இடத்தில் 1872 ஆம் ஆண்டு வாசக சாலை மற்றும் நூலகம் தொடங்கப்பட் டது. பின்னர் பழைய பேருந்து நிலை யம் அருகே கோட்டை மதில் சுவர் இடிக்கப்பட்டு, அதிலிருந்த செம்புரான் கற்களை கொண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு 1874 ஆம் ஆண்டு அப்போ தைய மாவட்ட நீதிபதி பர்னர் ஆர்தர் கோக் என்பவரால் திறந்து வைக்கப்பட் டது. இதையடுத்து 1892 ஆம் ஆண்டு இந்த கட்டிடத்துக்கு தஞ்சாவூர் யூனியன் கிளப் என பெயர் மாற்றம் செய்யப்பட் டது. இந்த கிளப்பில் ஹவ்லாக் என்ற பெயரில் ஆங்கில நூலகமும், பாவேந்தர் பெயரில் 5 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் நூலகமும், டென்னிஸ் கிளப்பும் இயங்கின. 1919 ஆம் ஆண்டு பிப்.12 ஆம் தேதி தஞ்சாவூருக்கு வந்த ரவீந்திரநாத் தாகூர் இந்த யூனியன் கிளப்புக்கு வருகை தந்து உரையாற்றியுள்ளார். அதேபோல் அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதா சன் உள்ளிட்ட தலைவர்களும் வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த பழைமை யான கட்டிடங்களான ஜூபிடர் திரைய ரங்கம், காவேரி லாட்ஜ், தஞ்சாவூர் யூனி யன் கிளப், சுதர்சன சபா ஆகியவற்றின் கட்டிடங்களை நேரில் ஆய்வு செய்து, குத்தகை காலங்கள் தொடர்பான ஆவ ணங்களை மாநகராட்சி நிர்வாகம் பரி சீலனை செய்தது. இதில் 99 ஆண்டுகள் குத்தகை காலம் முடிவடைந்ததாக கூறி ஜூபிடர் திரைய ரங்கம், காவேரி லாட்ஜ், தஞ்சாவூர் யூனி யன் கிளப் ஆகியவற்றின் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தண்டாரோ மூலம் அறிவித்து இடங்களை கையகப்படுத்து வதாக நோட்டீஸ் ஒட்டியது.
இதில் தஞ்சா வூர் யூனியன் கிளப் நிர்வாகம் உயர்நீதி மன்றத்தில் தஞ்சாவூர் மாநகராட்சியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரு வாரங்க ளுக்கு முன்பாக தஞ்சாவூர் வட்டாட்சி யர் மணிகண்டன், தமிழ்நாடு பொது இடங்களில் கேளிக்கை சட்டம் 1888-ன் படி, தஞ்சாவூர் யூனியன் கிளப் பதிவு செய்துள்ளதா, அப்படி பதிவு செய்து அதற்கான உரிமம் இருந்தால் பிப்.25 ஆம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு உத்தர விட்டிருந்தார். இதற்கு யூனியன் கிளப் நிர்வாகம், 148 ஆண்டுகள் பழமையான இந்த நிர்வாகத்தில் அதுபோன்று உரிமம் ஏதும் பெறவில்லை என எழுத்துப்பூர்வ மாக பதில் அளித்தனர். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்பார்வையில், செவ்வாய்க்கிழமை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, கோட்டாட்சியர் ரஞ்சித், வட்டாட்சியர் மணிகண்டன், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னி லையில், தஞ்சாவூர் யூனியன் கிளப் கட்டிடம் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாக கூறி தண்டோரா மூலம் அறிவித்து சீல் வைத்தனர்.
நூலகத்தை பாதுகாக்க கோரிக்கை
இதுகுறித்து மக்கள் நலப்பேரவை யின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வெ. ஜீவக்குமார் கூறுகையில், பழமையான தஞ்சாவூர் யூனியன் கிளப் கட்டிடம் வலு வாக உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தமிழ், ஆங்கில நூல்கள் உள்ளன. முதலில் நூலகமாக தொடங்கப்பட்ட இந்த கட்டிடத்தில் காலப்போக்கில் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு கள் நடைபெற்றுள்ளன. இந்த கட்டிடத் துக்கு ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் வந்து சென்றுள்ளதால், இதனை பாதுகாத்து, இந்த நூலகத்தை செம்மைப்படுத்தும் வகையில் தஞ்சா வூர் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தஞ்சா வூர் மாவட்ட மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார்.