தஞ்சாவூர், ஜூலை 18 - தஞ்சாவூர் - கும்பகோணம் புதிய புறவழிச்சாலையில் 1000 மரக்கன்று கள் நடும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் - விக்கிரவாண்டி சாலையில், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் வரை 30 கி.மீட்டர் தூரத்துக்கு புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டு டி.என்.45-சி என பெயரிடப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை யில் இருபுறமும் மரக்கன்றுகள் நட திட்ட மிடப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, சாலையை அமைக்கும் ஒப்பந்த நிறுவனமான படேல் நிறுவனம் ஆகியவை சார்பில், 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் அருகே கடப்பை கிராமத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட வனத்துறை அலுவலர் அஜில்அகமது மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் யு.உதய சங்கர், படேல் நிறுவனத்தின் பொது, திட்ட மேலாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் பழனி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியா ளர்கள், படேல் நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த புற வழிச்சாலையில் இருபுறமும் மரக்கன்று களும், சாலையில் நடுவே பூச்செடிகளும் நடப்பட்டன.